வாய்பேச முடியாத இளைஞனுக்கு திருப்பதி கோவிலில் பேச்சு வந்த அதிசயம்!!

558

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதியை சேர்ந்த ஏழுமலையான் சந்நிதியில் 18 வயது ஊமை இளைஞருக்கு பேச்சு வந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்தவர் பிரதிமா. இவர் தன் கணவருடன் பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தீபக் என்ற மகன் உள்ளார். ஆனால் தீபக் பிறக்கும் போதே ஊமையாக பிறந்துள்ளார்.

இதனால் அவருக்கு பேச்சு வர வேண்டும் என்பதற்காக, பெற்றோர்கள் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.

அப்போது அதில் ஒருபகுதியாக, தீபக் 4-வயதாக இருந்தபோது,பேச்சு கிடைக்க வேண்டும் என்று, திருப்பதி ஏழுமலையானை அவர்கள் வேண்டிக்கொண்டார்.

இந்நிலையில், தீபக்கின் 15-வயது முதலாக, அவருக்கு பேச்சு வரவேண்டி பலவித பயிற்சிகளை பிரதிமா அளித்து வந்தார். தற்போது அவருக்கு 18-வயதாகும் நிலையில், அண்மையில், திருப்பதிக்கு பிரதிமா குடும்பத்தினர் சென்றுள்ளனர்.

அங்கு, கோயிலுக்குள் சென்று, ஏழுமலையானை தரிசித்த அவர்கள், பின்னர் கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

அப்போது, கோவிந்தா கோவிந்தா என, பக்தர்கள் கோஷமிட்டு வந்ததைப் பார்த்த தீபக், திடீரென தானும், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டுள்ளார்.

இதைக் கண்டதும், பிரதிமா மற்றும் அவரது கணவரும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இதைத் தொடர்ந்து, தீபக் மழலை மொழியில் பேசத் தொடங்கியிருக்கிறார்.

பிறவி ஊமைக்கு, திடீரென பேச்சு வந்த சம்பவம் திருமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.