கழிவறையில் நிர்வாணமாக கிடந்த ஊழியர்!!

734

தமிழ்நாட்டில் இன்ஃபோசிஸ் ஊழியர் ஒருவர் கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தை சேர்ந்த இளையராஜா(வயது 31) என்பவர் செங்கல்பட்டில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்றிரவு கழிவறையில் இளையராஜா நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த கூறி சக ஊழியர்கள் சடலத்தை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து இளையராஜா குடும்பத்துக்கு தகவல் தரப்பட, நேரில் வந்த உறவினர்கள் இளையராஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாககூறி மறியல் போராட்டம் நடத்தினர்.

பொலிசார் சமாதானப்படுத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர், இருப்பினும் மர்மம் விலகும் வரை சடலத்தை வாங்கமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.