கல்லூரி வளாகத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

589

புதுடெல்லியில் உள்ள ஐஐடி வளாகத்தில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் (28), இவர் புதுடெல்லியில் உள்ள ஐஐடி கல்லூரியில் நீர்வளங்கள் குறித்த ஆராய்ச்சிப் படிப்பை படித்து வந்தார். மஞ்சுளாவின் கணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியப்பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் ஐஐடி-யின் நாளந்தா வளாகத்தில் உள்ள விடுதியில், மஞ்சுளா தனது அறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.