பற்றி எரிந்த கட்டிடம் : மனைவி-மகளை வெளியில் தூக்கி எறிந்த தந்தை!!

556

ரஷ்யாவில் தீயில் சிக்கிக் கொண்ட மனைவி மற்றும் மகளை அவரது தந்தை காப்பாற்றுவதற்காக கட்டிடத்திற்கு வெளியில் தூக்கி எறிந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்றில் திடீரென்று பயங்கர தீ வீபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதில் 5-வது மாடியில் தங்கியிருந்த குடும்பத்தினர் கட்டிடத் தீயில் சிக்கிக் கொண்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கிக் கொண்ட அவர்கள் வெளியில் வரமுடியாமல் தவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் ஜன்னல் அருகே வந்து நின்றுள்ளனர்.

அப்போது அதன் வழியே சென்ற பலரும் தீ எரிவதைப் பார்த்து, வேறு வழி இல்லை. இதனால் தாரளமாக குதியுங்கள் நாங்கள் பிடித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஜன்னல் அருகே நின்று கொண்டிருந்த அவர் தனது மனைவி மற்றும் மகளை வெளியில் தூக்கி எறிந்தார். அதன் பின் அவரும் குதித்தார்.

இச்சம்பவத்தால் கீழே இருந்த மக்கள் அவர்களை லாவகமாக பிடித்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பாடமால் காப்பாற்றினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.