வவுனியா யுரேனஸ் இளைஞர் கழகத்தினரால் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு!!

277

 
நேற்று (31.05.2017) சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம் அனுஸ்டிக்கபட்டது. இதனை முன்னெடுக்கும் வகையில் யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு குறிப்பிட்ட பாடசாலை மண்டபத்தில் விசேட கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கு யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் இதனை Adic Lanka நிறுவனத்தின் ஊழியர் அருளானந் விரிவுரையாளராக செயற்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் யுரேனஸ் இளைஞர் கழக அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்.

அத்தோடு சிகரட் கம்பனியின் அடுத்த இலக்கு உங்கள் பிள்ளைகளே என்ற செய்தியையும் யுரேனஸ் இளைஞர் கழகத்தினர் பிரசுரங்கள் மூலம் அனைவருக்கும் கையளித்ததுடன் பொது இடங்களில் இது தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.