வெற்றிகரமாக தனது 4வது அகவையை நிறைவு செய்து, 5வது ஆண்டில் தடம்பதிக்கும் வவுனியா நெற் இணையத்திற்கும், அதன் நிர்வாகக் குழுவினர் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த நல்வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வவுனியா நெற் இணையம் கடந்த 4 வருடங்களில் பலவேறு விதமான சிக்கல்கள், தடங்கல்கள், பிரச்சனைகளை சந்தித்து அவை யாவற்றையும் உடைத்தெறிந்து தமிழ் பேசும் பல ஆயிரக்கணக்கான இணைய பாவனையாளர்களின் அபிமான இணையமாகவும், வவுனியா மாவட்டத்தின் முன்னனி செய்தி வழங்கும் இணையமாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
தனது செய்திகளை வேகமாக வழங்கும் அதேநேரம் நடுநிலைமையாகவும், உண்மைத்தன்மையாகவும், பக்கச்சார்பின்றி வழங்குவதனை தனது சிறப்பம்சமாக கொண்டு வவுனியா நெற் இணையம் இன்று வரையில் தனது ஊடகப் பணியை ஆற்றி வருகின்றது என்றால் அதனை பாராட்டாமலும், மெச்சாமலும் இருக்கமுடியாது.
ஊடக தர்மத்திற்குட்பட்டு பணியாற்றிவரும் வவுனியா நெற் இணையத்தின் ஊடகவியலாளர்களையும் இந்நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.
அவ்வகையில் வவுனியா நெற் இணையம் எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி பெறவும், தொடர்ந்தும் தமிழ் பேசும் இணைய பாவனையாளர்களின் அபிமான இணையமாகவும் திகழ இறைவனை வேண்டுவதுடன் எனது வாழ்த்துக்களையும், ஒத்துழைப்புக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் சமூகப்பணியில்,
பாலச்சந்திரன் சிந்துஐன்.
வடமாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச்செயலாளர்,
தலைவர் & ஸ்தாபகர் – கலைமகள் நற்பணி மன்றம்.






