வவுனியாவில் மக்களுடைய வாழ்வியலை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடுமாறு கோரி பிரச்சாரம்!!

650

 
மக்களின் சமூக பொருளாதார கட்டமைப்பைச் சீரழிக்கும் சாராயக்கடைகளை இழுத்து மூட அணிதிரளுமாறு சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் நேற்று பிற்பகல் வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடப்பகுதிகளிலுள்ள கடைகள், பேருந்து பயணிகளிடம் துண்டுப்பிரசுர விழிப்புணர்வு நடவடிக்கை இடம்பெற்றது.

மதுவால் சீரழியும் இளைஞர்களையும் கிராமங்களையும் மீட்டெடுப்போம் என்று துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.