வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகக் கட்டடமும் கலாசார மண்டபமும் திறப்பு விழா!!

1130

 
வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகக் கட்டடமும் கலாசார மண்டபமும் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு நெடுங்கேணியில் இடம்பெற்றது.

நீண்ட காலமாக வவுனியா வடக்கு பிரதேசசபையின் நிர்வாக கட்டடம் தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்திருந்த நிலையில் வட மாகாண உள்ளுராட்சி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு அமைக்கப்பட்ட இக் கட்டிடத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா திறந்து வைத்திருந்ததுடன், வவுனியா வடக்கு பிரதேசத்தின் நீண்ட கால தேவையாக காணப்பட்ட கலாசார மண்டபத்தினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திறந்து வைத்திருந்தார்.

பிரதேச சபையின் செயலாளர் க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஆர்.இந்திரராசா, எம்.தியாகராசா, செ.மயூரன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.