வவுனியாவில் வலுவழந்த குடும்பத்திற்கு கூரைத் தகடுகள் அமைச்சர் சத்தியலிங்கத்தால் வழங்கிவைப்பு!!

670

 
வவுனியாவிலுள்ள வலுவிழந்த குடும்பத்தலைவரைக்கொண்ட குடும்பமொன்றுக்கு ஒருதொகுதி கூரைத் தகடுகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கூரைத்தகடுகள் அமைச்சரின் சார்பில் அமைச்சரின் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் சிந்துஜனால் வழங்கப்பட்டது.

அடிப்படைவசதிகள் இன்றி கொட்டில் வீட்டில் நீண்டகாலமாக வதியும் வறுமைக்கோட்டக்குட்பட்ட இந்தக்குடும்பம் விடுத்த வேண்டுகோளையடுத்து அமைச்சரின் பணிப்பின்பேரில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் ஊடகபிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.