ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் யாழ் மங்கை அனித்தா புதிய சாதனை!!

1457

திய­கம மஹிந்த ராஜ­பக்ஷ விளை­யாட்­ட­ரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்­ப­மான ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான இரண்­டா­வது திறன்காண் போட்­டியில் யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப்­பாய்தல் நட்­சத்­திரம் அனித்தா ஜெக­தீஸ்­வரன் உட்­பட மூவர் இலங்­கைக்­கான புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார்.

இதே மைதா­னத்தில் கடந்த மாதம் நடை­பெற்ற முத­லா­வது திறன்காண் போட்­டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலை­நாட்­டிய தனது சொந்த சாத­னையை அனித்தா முறி­ய­டித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் இஷார சந்­த­ருவன் 5.11 மீற்றர் உயரம் தாவி இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இதற்கு முன்னர் இவ­ரது சாதனை 5.10 மீற்­ற­ராக இருந்­தது.

ஆண்­க­ளுக்­கான குண்டு எறிதல் போட்­டியில் சரித் கப்­பு­கொட்­டுவ 17.55 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இலங்­கைக்­கான புதிய சாத­னையை நிலை­நாட்­டினார். இவ­ரது முன்­னைய சாதனை 17.03 மீற்றர் தூர­மாக இருந்­தது.

ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்கு மேலும் ஐவர் தகுதி

திய­க­மவில் நடை­பெறும் திறன்காண் போட்­டி­களின் போது அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­திய ஐவர் ஆசிய மெய்­வல்­லுநர் போட்­டிக்­கான அடைவு மட்­டத்தை எட்­டி­யதன் மூலம் அப் போட்­டியில் பங்­கு­பற்றும் தகு­தியைப் பெற்­றுக்­கொண்­டனர்.

ஆண்­களில் வினோஜன் சில்வா (100 மீற்றர், 10.32 செக்.), ஜீ. எம். பிரே­ம­கு­மார (400 மீற்றர், 46.36 செக்.), எச். எம். டிலிப் ருவன் (400 மீற்றர், 46.41 மீற்றர்), தனூக்க லிய­ன­பத்­தி­ரண (நீளம் பாய்தல் 7.88 மீற்றர்), பெண்­களில் ருமே­ஷிகா ரட்­நா­யக்க (100 மீற்றர், 11.60 செக்.) ஆகி­யோரே ஆசிய மெய்­வல்­லுநர் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றவர்களாவர்.

ஏற்­க­னவே தகு­தி­ பெற்ற ஐவ­ருடன் இது­வரை மொத்தம் பத்து மெய்­வல்­லு­நர்கள் தகு­தி­ பெற்­றுள்­ளனர்.