உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்வு!!

696

வெள்ளம் மற்றும் மண் சரிவுகள் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளது எனவும் 78 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் காயமடைந்துள்ள 72 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவ்வனர்த்தத்தினால் 600,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 25000 க்கும் மேற்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.