யாழில் பணப்பிரச்சினை காரணமாக இளைஞன் குத்திக் கொலை!!

457

பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலவாய் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

26 வயதான குறித்த இளைஞன் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அதே பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண பிரச்சினை காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.