வவுனியா பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலையில் உலக சுற்றுச் சுழல் தினம் 2017!!

682

 
உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (05.06) வவுனியா பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பாடசாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வானது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் வி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்களுடன் பாடசாலை மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

அத்துடன் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுச் சூழல் தொடர்பான கண்காட்சி நிகழ்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுற்றுச் சூழல் தொடர்பான கண்காட்சி நிகழ்வையும் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்து நிகழ்வை பார்வையிட்டதுடன் தயாரிக்கப்பட்ட பொருட்களின் செயற்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கங்களை கேட்டறிந்துகொண்டார்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதுடன் அதில் சிறப்பான தயாரிப்புக்களை மேற்கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.