பெண்ணொருவரை பணய கைதியாக பிடித்த தீவிரவாதி : பொலிஸார் சுட்டுக்கொலை!!

264

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பொது மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த ஒருவரை முற்றுகையிட்ட பொலிஸார் அவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பிரிங்டன் பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றமையை கேள்வியுற்ற பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர். இதன்போது தீவிரவாத தடுப்பு பொலிஸார் கனரக ஆயுதங்களுடன் அங்கு சென்றனர்.

அதன்போது, மாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்தவர்கள் ஆயுததாரி ஒருவரினால் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனா். அவா்களை மீட்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டனர்.

Yacqub Khayre என்ற பெயருடைய மற்றொரு நபர் அங்கு ஒரு பெண்ணை பணய கைதியாக பிடித்து வைத்திருந்தார். Khayre என்ற 29 வயதுடைய நபரை முற்றுகையிட்ட போது அவர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் பெயரில் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது ஆயுததாரிக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் போது பொலிஸார் ஆயுததாரியை சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளும் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பணையக்கைதியும் காயமடைந்துள்ளார்.

ஏற்கனவே பலியானவர், ஒரு கட்டட ஊழியர் எனவும் அவர் தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாகவும் விக்டோரியா பொலிஸ் தலைமை ஆணையர் Graham Ashton தெரிவித்துள்ளார்.

அங்கு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக Khayre பொலிஸ் அதிகாரிகளை அங்கு வரவழைத்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.