பெற்ற தாயை மட்டையால் தாக்கி கொலை செய்த மகள் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாத்தறை-அக்குரெஸ்ஸ வில்பிட்ட பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
44 வயதான மகளின் தாக்குதலினால் குறித்த தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளின் தாக்குதலினால் கே.சிறியாவத்தி என்ற 73 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் குறித்த தாயின் மகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்குரெஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி டீ.சேனாநாயக்கவின் ஆலோசனைக்கமைய,சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.