இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு விமான மூலம் மடிகணனியில் 40 இலட் சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று அதிகாலை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளததாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை இந்தியாவின் மும்பைக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ள மாவனெல்லைப் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நபரின் மடிக் கணனியை சுங்கப்பிரிவினர் சோதனை செய்தபோது அதில் மிக நுட்பமான முறையில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர் .
இதனைத் தொடர்ந்து அவரை சுங்கப் பிரிவினர் கைது செய்ததுடன் விசாரணைகள் இடம் பெற்றுவருவதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.