இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த புதிய வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை புதுடில்லியில் சந்தித்து பேச்சு நடத்திய இந்தியபிரதமர் நரேந்திரமோடி இலங்கையின் அரசியல் நிலைமை மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயங்கள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்தல், பொருளாதார வர்த்தக தொடர்புகளை கட்டியெழுப்புதல், முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் வெ ளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் விரிவாக பேச்சு நடத்தியுள்ளனர்.
இதனிடையே கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்திய பிரதமரிடம் எடுத்துக்கூறியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்ற ரவி கருணாநாயக்க முதலாவது வெ ளிநாட்டு விஜயமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு சென்றிருந்தார். இதன்போது நேற்று முன்தினம் மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வெ ளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்திய வெ ளியுறவு செயலர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இந்திய தலைவர்களுடனான இந்த சந்திப்புக்களின்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமூக பொருளாதார அரசியல் கலாசார உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுடனான சந்திப்பின்போது இலங்கை இந்திய மீனவர் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு தொடர்பில் புதுடில்லியிலிருந்து வெ ளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க கேசரிக்கு தகவல் தருகையில்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வெளிவிவகார அமைச்சராக நான் முதலாவதாக இந்தியாவுக்கு விஜயம் செய்தமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னிடம் தெரிவித்தார். அதேபோன்று என்னை இந்தியாவுக்கு அழைத்தமைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
இந்த சந்திப்பின்போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பொருளாதார அரசியல் சமூக கலாசார உறவு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சிறந்த நெருக்க நிலையை அடைந்துள்ளது. அந்த நிலையை மேலும் மேம்படுத்தவேண்டும் என இதன்போது பேசப்பட்டது. குறிப்பாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பொருளாதார உறவு தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இலங்கையிலான முதலீடுகள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது.
இதேவேளை இலங்கையின் அரசியல் நிலைமை தொடர்பாகவும் இந்திய பிரதமர் மோடி என்னிடம் கேட்டறிந்துகொண்டார். இது சிறந்த சந்திப்பாக அமைந்தது.
கேள்வி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து பேசப்பட்டதா?
பதில் இலங்கையில் அரசியல் நிலைமைகள் குறித்து இந்திய பிரதமர் கேட்டறிந்துகொண்டார். அத்துடன் அரசியல் தீர்வு குறித்தும் அவர் கலந்துரையாடினார். குறிப்பாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய பிரதமர் என்னிடம் விடயங்களை கேட்டறிந்துகொண்டார். அவரிடம் நான் ஒரு விடயத்தை தெ ளிவாக குறிப்பிட்டேன். அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக இந்திய பிரதமரிடம் நான் உறுதிபட தெரிவித்தேன் என்றார்.