உதவி செய்ய மறுத்ததால் அரசு அதிகாரிகளை விநோதமாக பழிவாங்கிய நபர்!!

695

அரசு அலுவலகத்தில் மனுவை ஏற்க மறுத்ததால், மனுதாரர், அலுவலத்தில் மூட்டை பூச்சிகளை அவிழ்த்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா அகஸ்டா மாகணத்தைச் சேர்ந்தவர் வில்லியம்ஸ். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் இருக்கும் குடியிருப்பில் மூட்டை பூச்சிகள் தொல்லை காரணமாக அந்த குடியிருப்பின் மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த புகாருக்கு தக்க நடவடிக்கையை எடுக்காமல் புகார் அளித்த வில்லியம்சை அந்த குடியிருப்பில் இருந்து காலி செய்யும் படி கூறியுள்ளனர்.

இதனால் வீட்டை காலி செய்ய உதவும்படி கோரி அரசு அலுவலகத்தை நாடினார். அவருடைய மனுவை பரிசோதனை செய்த அதிகாரிகள் வில்லியம்சுக்கு உதவ மறுத்துவிட்டனர்.

தன் நிலையை கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், ஒரு பாட்டிலில் மூட்டை பூச்சிகளை கொண்டு வந்து அரசு அலுவலகத்திற்குள் அவிழ்த்துவிட்டுள்ளார். இந்த செயலின் மூலம் மூட்டை பூச்சிகளை அகற்றுவதற்காக அரசு அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

அரசு அலுவலகத்திற்குள் மூட்டை பூச்சிகளை விட்டதால் வில்லியம்ஸை அகஸ்டா மாகாண பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.