வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று (08.06.2017) வியாழக்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலையில் கிரியைகள் ஆரம்பமாகி சிறப்புப் பூஜைகள் இடம்பெற்று காலை எட்டு மணிளவில் ஸ்ரீ காளியம்மனின் ரதோற்சவம் இடம்பெற்றது.
இன்றைய தேர்த்திருவிழாவின் போது அடியார்கள் காவடிகள், அங்கபிரதட்சணம், அடியடித்தால் மற்றும் கற்பூரசட்டி ஏந்தி தமது நேர்த்திகடன்களை நிறைவு செய்தனர்.
இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.











































































































