முச்சக்கர வண்டி விபத்து : பெண் பலி : இரு சிறுவர்கள் காணாமல்போன அவலம்!!

215

மஹியங்கனையில் ஓட்டோ ஒன்று கால்வாய் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், சிறுவன் ஒருவரும் குழந்தையொன்றும் காணாமல்போயுள்ளனர்.

மஹியங்கனை பதுளை பிரதான வீதிப் பகுதியில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஓட்டோ விபத்துக்குள்ளானபோது, அதில் சாரதியுடன் சேர்த்து 6 பேர் பயணித்துள்ளனர். இந்த விபத்தில் 21 வயது பெண் ஒருவரே பலியானார்.

மேலும், 7 வயது சிறுவன் மற்றும் 2வயது பெண் குழந்தை ஆகியோர் காணாமல்போயுள்ளனர். அவர்கள் கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கால்வாய் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போன இரண்டு குழந்தைகளையும் மீட்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.