தலைக்கவசம் அணிந்த நிலையில் திருமண வைபவத்தில் பங்குபற்றிய மணமக்களும் விருந்தினர்களும்!!

488

 
புன­ர­மைப்புப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்த தேவா­ல­ய­மொன்றில் திரு­மண வைப­வ­மொன்று நடை­பெற்­றதால், இத்­தி­ரு­மண வைப­வத்தில் கலந்­து­கொண்ட மண­மக்கள் மற்றும் விருந்­தி­னர்கள் அனை­வரும் தலைக்­க­வசம் அணிந்த நிலையில் காணப்­பட்­டனர்.

இங்­கி­லாந்தின் சரே பிராந்­தி­யத்­தி­லுள்ள பான்ஸ்டெட் நகர தேவா­ல­ய­மொன்றில் இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது.

55 வய­தான அன்டி போய்ஸ் என்­ப­வரும் 49 வய­தான சுசான் கெம்பெல் என்­ப­வ­ருக்கும் இடையில் இத்­தி­ரு­மண வைபவம் நடை­பெற்­றது. 23 வரு­டங்­க­ளாக இணைந்து வாழும் ஜோடி இது.

800 வருட காலம் பழைமை வாய்ந்த தேவா­ல­ய­மொன்றில் இவர்கள் திரு­மண வைப­வத்தை நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.
ஆனால், திரு­ம­ணத்­துக்கு சில மாதங்­க­ளுக்கு முன்னர், மேற்படி தேவா­ல­யத்தின் புன­ர­மைப்புப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

எனினும், அதே தேவா­ல­யத்தில் தமது திரு­ம­ணத்தை நடத்­து­வ­தற்கு இந்த ஜோடி­யினர் தலைக்­க­வசம் அணிந்த நிலையில் திரு­மண வைப­வத்தில் பங்­கு­பற்­றினர்.

அவர்களைப் போலவே திருமண வைபவத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களும் தலைக்கவசம் அணிந்திருந்தனர்.