வவுனியாவில் கார் தடம்புரண்டு கோர விபத்து : இருவர் படுகாயம்!!

656

 
வவுனியா கணேசபுரம் பகுதியில் இன்று (09.06.2017) காலை 9.30 மணியளவில் கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.  இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மடுவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் வண்டியின் சாரதி கணேசபுரம் பகுதியில் பாலப்பலம் பார்த்துக்கொண்டு வந்துள்ளார். வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த கார் ( அதிவேகமாக) எதிரே மோட்டார் சைக்கில் நடுவீதியில் வருவதை அவதானித்து காரை வீதியில் அருகே திருப்பியுள்ளார்.

எனினும் வீதியின் அருகே பொதுமக்கள் நிற்பதை அவதானித்து வீதியின் மறுபக்கம் திருப்ப முற்பட்ட சமயத்தில் கார் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கில் நிற்காமல் சென்றுவிட்டது.

காரில் பயணித்த சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பரயனாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.