ஆசிரியரால் தாக்கபட்ட மாணவன் வைத்தியசாலையில்!!

566

ஆசிரியரால் தாக்கபட்ட பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிஸ நிலையத்தில் பெற்றோர் முறைபாடு செய்துள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை ஆசிரியர் ஒருவர் தண்டனை வழங்கும் வகையில் தாக்கியமையால் குறித்த மாணவன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (09.06) பிற்பகல் 12.35 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவாரல் பாடவேலை திட்டம் ஒன்று வழங்கிய போது குறித்த மாணவண் இரண்டாவது முறையாக குறித்த பாடத்தினை செய்து காட்டாமைக்காக குறித்த ஆசிரியர் மாணவனை தலைபகுதியை பிடித்து கதிரையில் மோதியதாகவும், மாணவனின் முதுகில் கையால் தாக்கியதாக பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர் முறைபாட்டில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தாக்கபட்ட மாணவனின் பெற்றோரால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யபட்டு, முறைபாடு தொடரபாக நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் – பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு குறித்த ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.