ஷேவாக், கம்பீருக்கு கங்குலி அட்வைஸ்!!

277

Sourav Gangulyஇந்திய அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், கம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மோசமான போம் காரணமாக மூத்த வீரர்கள் ஷேவாக், கம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தொடர்ந்து அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தீவிர பயிற்சிக்கு பின்னர் யுவராஜ் சிங் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து கங்குலி அளித்துள்ள பேட்டியில், இந்தியாதான் தற்போதைய நிலையில் நல்லதொரு அணியாக விளங்குகிறது.

மேலும் யுவராஜ் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளதால் துடுப்பாட்ட வரிசையில் 4வது இடம் பலமடைந்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் வந்து விளையாடும்போது நிச்சயம் யுவராஜ் சிங் மிரட்டலாக இருப்பார்.

மீண்டும் அணியில் இடம் கிடைக்க யுவராஜ்சிங் மேற்கொண்ட முயற்சிகள், கடுமையான உழைப்பு பாராட்டுக்குரியது.
கிட்டத்தட்ட 6 வார காலம், பிரான்ஸில் பயிற்சி எடுத்துள்ளார். இது ஆச்சரியப்படுத்துகிறது. மீண்டும் நல்ல பார்முக்கு அவர் திரும்பியுள்ளார். இந்திய அணிக்கு அவர் நல்ல பலம் சேர்ப்பார்.

ஆனால் மீண்டும் அணிக்குத் திரும்பப் போராடும் ஷேவாக்கும், கம்பீர் அதற்கான முயற்சிகளை முழுமையாக எடுப்பது போலத் தெரியவில்லை. தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர்கள் வீணடிக்கிறாரக்ள். இந்திய ஏ அணியில் இடம் கிடைத்த நிலையில் அதை அவர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை இது துரதிர்ஷ்டவசமானது.

ஷேவாக்கும் கம்பீரும் சிறப்பாக ஆடி தங்களது திறமைகளை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அணிக்கு திரும்ப முடியும் என்று தெரிவித்துள்ளார்.