துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட நபர்!!

528

புத்தளம் வென்னப்புவ பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வென்னப்புவ சுனவேல் பியனம மாவத்தையில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வென்னப்புவ சுனவேல் பியனம மாவத்தையைச் சேர்ந்த 48 வயதான வசந்த பெரேரா என்பவரே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த நபர் வட்டிக்கு கடன் வழங்கும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னர் வீட்டையும் 60 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்திருந்தாகவும் பண கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவர் கட்டிலில் படுத்தவாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். சடலத்தை பார்த்த அயல் வீட்டில் உள்ள உறவினர் ஒருவர் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை