நண்பனை கத்தியால் குத்திய 12 வயது மாணவன்!!

458

knif

12 வயது பள்ளி மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மன் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது இரண்டு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 12 வயது சிறுவன் கத்தியால் தன்னுடன் சண்டையிட்ட 13 வயது சிறுவனின் மார்பில் குத்தியுள்ளான்.
இதில் காயப்பட்ட சிறுவன் அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சையின் மூலம் குணமடைந்தான்.



ஆனால் தற்போது அவனது நிலமை மீண்டும் மோசமாகியுள்ளது.
இதுகுறித்து பொலிசார் சிறுவர்களின் மோதலுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. மேலும் பள்ளிகளில் மாணவர்களை விளையாட்டு மைதானத்திற்கு அனுப்பிவிட்டு ஆசிரியர்கள் கவனிப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறுவர்களிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.