யானை தாக்கி பௌத்த மதகுரு பலி!!

291

கொச்சிக்கடை, கட்டான பிரதேசத்தில் ஊர்வலத்தில் சென்ற யானையொன்று தாக்கியதில் பௌத்த மதகுரு ஒருவர் பலியானர்.

கட்டானயிலுள்ள குறித்த விகாரையில் வருடாந்த உற்சவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளது. பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த குறித்த பௌத்த மதகுரு நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (12) அதிகாலை உயிரிழந்தார்.

குறித்த பௌத்த மதகுரு 25 வயது மதிக்கத் தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் எனவும், இறுதிவரை அனுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் விகாரை கல்விக் கூடத்தில் பேராசிரியராக பணியாற்றியிருந்தார்.

மரண விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.