சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது : நுகர்வோர் விவகார அதிகாரசபை!!

225

சீனியின் விலையை தன்னிச்சையாக உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகாரசபையின் அனுமதியின்றி வெள்ளைச் சீனியின் விலையை வர்த்தகர்கள் உயர்த்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார சட்டத்தின் அடிப்படையில் வெள்ளைச் சீனி ஓர் நிலையான பண்டமாக பட்டியலிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சீனியின் விலையை உயர்த்த வேண்டுமாயின் அதிகாரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

இந்த விடயம் அத்தியாவசிய பண்ட இறக்குமதியாளர் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைச் சீனிக்கான இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பினைத் தொடர்ந்து பால் மற்றும் வெறும் தேநீரின் விலை உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.