வவுனியாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட தாய்க்கு தமிழ் விருட்சம் அமைப்பு உதவி!!

510

 
வவுனியா கண்ணாட்டி கனேசபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஜெயராம் மடுராணி என்பவர் 22.05.2017 செவ்வாய்க்கிழமை கணவனால் கை கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது புதிய வேலர்சின்னகுளத்தில் தனது சகோதரியின் இல்லத்தில் வசித்து வருகிறார்.

கால்கள் நடக்க முடியாத நிலையில் தனது சிறு வேலைகளை கூட செய்யமுடியாது இருந்த இவருக்கு வீட்டில் தனது நாளாந்த கடன்களை செய்வதற்கு தமிழ் விருட்சம் சக்கர நாற்காலி ஒன்றை உடன் வழங்கி உதவியுள்ளது. இவரது நான்கு பிள்ளைகள் தற்போது சிறுவர் நன்நடத்தை அதிகரிகளால் சிவன் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். கணவர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .

மாவட்ட சமூகசேவை அதிகாரி செல்லத்துரை ஸ்ரீநிவாஸன் தமிழ் விருட்சத்தின் தலைவர் செல்வராசா சந்திரகுமார் கண்ணன், செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் சென்று இன்று தமிழ் விருட்சத்தின் வேண்டுகோளிற்கிணங்க புலம் பெயர் தேசத்து உறவான குருமன்காடு குணா அவர்களின் நிதிப்பங்களிப்புடன் இந்த உடனடி உதவியை வழங்கியுள்ளனர்.