ஐதராபாத்தில் காஜல்அகர்வாலை காண திரண்ட ரசிகர்கள் : பொலிஸ் தடியடி!!

313

kajal

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். 2008ல் சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டி விட்டு போனார். அப்போது அவ்வளவு அறிமுகம் இல்லை. அதன்பிறகு சிரஞ்சீவி மகன் ராம்சரண் ஜோடியாக மகதீரா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார்.

அந்த ஒரே படம் ஆந்திராவில் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்த்தியது. தொடர்ந்து நிறைய ஹிட் படங்களில் நடித்தார். தமிழிலும் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி என நடித்து உயர்ந்துள்ளார். இரு மாநிலங்களிலும் ரசிகர்கள் வட்டாரம் பெருகி உள்ளது.

ஐதராபாத்தில் வணிக வளாக திறப்பு நிகழ்ச்சியொன்றுக்கு காஜல் அகர்வாலை அழைத்து இருந்தனர். போஸ்டர்கள் மூலம் அவர் வருகையை விளம்பரபடுத்தி இருந்ததால் வணிக வளாகத்தை சூற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்றனர்.

காஜல் அகர்வால் வந்ததும் அவரை பார்க்க முண்டியடித்தார்கள். கூட்டத்தை பார்த்து காஜல் அகர்வாலுக்கும் வியப்பு ஏற்பட்டது. கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொலிசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.