மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தை : காட்டிக் கொடுத்த நாய்!!

297

மஹியங்கனை, பூஜாநகர பிரதேசத்தில் புகைப்பட்டிருந்த நிலையில் குழந்தையின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் வீட்டு தோட்டத்தில் குழந்தை புகைப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வீட்டில் வளர்கப்பட்ட நாய் குழந்தையை உடலை புதைத்த இடத்திலிருந்து கொண்டு வந்துள்ளது.

இதனையடுத்து பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

குழந்தையின் உடல் உயிருடன் புகைப்பட்டதா அல்லது உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்டதா என்பது தொடர்பில் நீதவான் விசாரணையின் பின்னர் ஆராயப்படவுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரிகள் உட்பட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.