நடிகை ராதாவின் தோட்டத்தில் மேய்ந்த ஆடுகளுக்கு நேர்ந்த கதி!!

591

நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ரவி(வயது 53) என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் தோட்டத்தில் வாழைகளையும் பயிர் செய்து வந்தார்.

மலை அடிவாரத்தில் உள்ளதால் காட்டுப்பன்றிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆடு மாடுகள் அடிக்கடி தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்து வந்தன.

தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள், ஆடுகள் புகுந்து வாழைகளை நாசம் செய்வதை கண்டு ஆத்திரம் அடைந்த ரவி, காட்டுப்பன்றிகள், ஆடுகளுக்கு விஷம் வைத்ததாக கூறப்படுகிறது.

அங்கு வைக்கப்பட்டு இருந்த விஷத்தை அறியாத ஆடுகள் வாழையை சாப்பிட்டவுடன் , சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக செத்து விழுந்தன. இப்படியாக 10 ஆடுகள் தோட்டத்திலேயே செத்து விழுந்தன.

இது தொடர்பாக ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை விஷம் வைத்து சாகடித்ததாக தோட்டத்து காவலாளி ரவியை கைது செய்தனர்.