படிக்க விரும்பவில்லை எனக் கூறி தற்கொலை செய்து கொண்ட 15 வயது மாணவன்!!

683

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்கை நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டே குறித்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வரக்காபொல, ஒன்னாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனது நண்பர்களிடம் பலமுறை இது தொடர்பில் தெரிவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.