இலங்கையை மீண்டும் அச்சுறுத்த வரும் அடைமழை!!

244

இலங்கையின் தென்மேற்கு பிரதேசங்களிலும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டையிலும் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பகுதிகளில் பெய்யும் மழையில் சற்று அதிகரிப்பு தன்மையை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகணங்களிலும் காலி, மத்தறை மற்றும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களிலும் மாலை 3 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன் காரணமாக மழை பெய்யும் பகுதியில் மழையுடன் கடும் காற்று வீசுவதோடு மின்னல் ஆபத்துக்களும் ஏற்பட கூடும். இது குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் எச்சரித்துள்ளது.