இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதித்த லண்டன் நீதிமன்றம்!!

218

லண்டனில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் மிச்சம் என்ற பகுதியில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அக் கருத்து முரண்பாடு இரு குழுக்களுக்கிடையிலான சண்டையாக மாறி மோதலாகியுள்ளது. இதன் போது லண்டனைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் குறித்து லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வந்தது.

இன்றைய தினம் வழங்கப்பட்ட தீர்ப்பில், இலங்கைச் சேர்ந்த பிரஷாத் சோதிலிங்கம் 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுகன் செல்வராசனுக்கு 14 ஆண்டுகளும், சிவாகரனுக்கு 31 மாதங்களும், விசுபரன் தயாபரன் 21 மாதம் என்ற அடிப்படையில் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.