
பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்தில் மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது மகன் நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற்றுள்ளார் என கூறி தீயினால் சூடு வைத்துள்ளார்.
இம் மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 95 புள்ளிகளை பெற்றுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை பொகவந்தலாவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் கழுத்துப் பகுதியிலும் வலது காலிலும் எரி காயங்களுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





