உலகின் மிக அரிய வகை திமிங்கலம் இலங்கை கடலில் கண்டுபிடிப்பு!!

340

உலகின் மிக அரிய வகை திமிங்கிலங்கள் இனம் ஒன்று இலங்கையின் கடற்பரப்பில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தெற்கு கடலில் திமிங்கிலங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் குழுவொன்றினால் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “ஒமுரா” என்ற பெயரில் இந்த திமிங்கில வகை அடையாளப்படுத்தப்படுகின்றது.

இந்த திமிங்கில இனம் தெற்கு மற்றும் வட அட்லாண்டிக் கடல், மேற்கு பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

எனினும் வெற்று கண்களினால் இந்த திமிங்கிலங்களை காண்பதென்பது மிகவும் கடினமான விடயமாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த வகை திமிங்கிலங்கள் இலங்கையில் காணும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென அந்த குழுவினர் தெரிவித்துள்ளார்.

தெற்கு கடலில் கமராவில் பதிவாகிய புகைப்படங்கள் சிலவற்றை அந்த குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

1999 – 2000 ஆண்டு காலப்பகுதியில் இந்த திமிங்கிலங்களை வெற்று கண்களினால் காண்பதற்கு சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.