புகையிரத்தில் மோதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம்!!

515

கொழும்பு நோக்கி பயணித்த கௌனிவெலி புகையிரதத்தில் மோதி உயிரிழந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தந்தை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவிந்தி பபசரா ஜயசேகர (18 வயது) என்ற மாணவி நேற்று இரவு 8.05 மணியளவில் புகையிரத்தில் மோதி உயிரிழந்தார். இந்த நிலையிலேயே அவரது தந்தை இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை உயிரிழந்த மாணவியின் சடலம் தற்போது ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொட்டாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்த மாணவி கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.