பிளாஸ்டிக் அரிசி தொடர்பில் வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

715

பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய நபர்களுக்கு எதிராக நட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தங்களில் பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான தகவல்களை உருவாக்கிய மற்றும் ஊக்குவித்த குழுக்கள் தொடர்பான தகவல்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அந்த அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் கூறினார்.

மேலும், பிளாஸ்டிக் அரிசி சம்பந்தமாக போலியான சதி இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.