வவுனியாவில் நாளை (16.05.2017) காலை 10 மணிக்கு வவுனியா மத்திய பேரூந்து நிலையம் முன்பாக வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று (15.06.2017) மதியம் 3.30 மணியளவில் வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போதே நாளைய தினம் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ் ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளன.






