மன்னாரில் படகு கவிழ்ந்து விபத்து: நால்வர் பலி, ஒருவரை காணவில்லை..!

536

mannarமன்னாரிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 16 பேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர் ஒருவர் காணாமற்போயுள்ளார்.

உயிரிழந்த நால்வரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்துக்கு முகங்கொடுத்த மேலும் 11 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.