முதலமைச்சருடன் விரைவில் இணக்கம் ஏற்படும் : இரா.சம்பந்தன்!!

330

வடக்கு மாகாண சபையின் தற்போதைய முரண்பாடான நிலையை தீர்த்துக் கொள்வதற்கு தாம் தயார் எனத் தெரிவித்துள்ள த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் விரைவில் இணக்கம் ஏற்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடம் நேற்றிரவு தொடர்பு கொண்டு கேட்டபோது இவ் விடயம் சம்பந்தமாக அவர் கூறுகையில்,

இது தொடர்பில் கூட்டமைப்பு முடிவெடுக்க வேண்டும். குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க முடியும்.



ஆனால் குற்றவாளிகளாக்கப்படாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதானால் அவர்களுடைய பதவிக்கு ஏற்புடையதல்ல. அவர்களுக்கு மாறாக எடுப்பதை அவர்களைப் பொறுத்தவரையிலோ அல்லது கட்சி க்கோ ஏற்புடையதல்ல.

ஆனால் இவ்விடயத்தை சுமுகமாக தீர்ப்பதற்கு விரும்புகின்றோம். அந்த முடிவும் முதலமைச்சர் கையில் தான் உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

– வலம்புரி-