வவுனியாவில் நாளை புதிய ஜனநாயக கட்சியின் 35வது ஆண்டு பொதுக்கூட்டம்!!

633

மக்களை அணிதிரட்டுவோம், மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம். போன்ற பல வாசகத்தோடு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது 35வது ஆண்டுவிழாக்காக பொதுக்கூட்டம் என வெளியிடப்பட்ட துண்டுபிரசுரத்தில் மேற்குறிப்பிட்ட பல வாசகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுக்கூட்டமானது நாளை (06.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு வவுனியா இந்திரன்ஸ் உணவக மண்டபத்தில் நடைபெறுவதாக குறிப்பிடபட்டுள்ளது.

இது பற்றி கட்சியின் செயலாளர் நி.பிரதீபன் தெரிவித்தபோது ..

மக்கள் நம்பி வாக்களித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய உணர்சிகளை கிளப்புகின்றது தவிர மக்களின் அடிப்படை தேவைகளை புரிந்துகொண்டு செயற்பட்டால்போல் தெரியவில்லை.

அதேபோல்தான் அரசும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உரு ஏற்றுவது போல் நடக்கிறது. மக்களின் அடிப்படை விடயத்தில் கவனம் எடுக்கவில்லை ஆகவேதான் நாங்கள் களமிறங்கவேண்டிய தேவை வந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

vavuniya vavuniya1