கொழும்பில் விதிமுறைகளுக்கு மாறாக கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கழிவுகளை கொட்டுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் இதுவரையில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
கொழும்பின் பல பகுதிகளில் முறையற்றவகையில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை கடந்த வாரத்தில் இராணுவத்தின் உதவிமூலம் அகற்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே கொழும்பில் குப்பைகொட்டுவோறுக்கு எதெிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.