முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க விசேட குழுக்கள்!!

225

முறையற்ற விதத்தில் குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கொழும்பு நகரில் மாத்திரம் 06 விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது

இந்தக் குழுக்கள் ஊடாக முறையற்ற விதத்தில் குப்பை கொட்டுவோரை ஔிப்பதிவு செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வீ.கே அநுர தெரிவித்தார்

இதற்காக இராணுவம்,பொலிஸார் மற்றும் நகரசபை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக நகரசபை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை குப்பைகளை பிரிவுகளாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடு ஆரம்பமானது முதல், கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு 650 டொன் வரை குறைவடைந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் சுட்டிக்காட்டினார்,