டெங்கு நுளம்புகள் பக்டீரியாக்களை கொண்டு கட்டுப்படுத்தப்படுகின்றன : ராஜித!!

307

அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தீவிரமாக பரவியுள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் தொடர்பாக ஆராயவே அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன. இந்த நிலையில் இலங்கையிலும் அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தோனேசியா மற்றும் வியட்நாமிலும் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்

இந்த திட்டத்தின் மூலம் டெங்கு நுளம்புகள் பக்டீரியாக்களை கொண்டு கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.