எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் : விவசாய அமைச்சு!!

274

எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியமுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்குத் தேவையான அரிசியை தேவைக்கேற்ப பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்

நாட்டில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வறட்சி காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனால் எதிர்பார்க்கப்பட்ட அரிசி உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், மக்களின் நுகர்விற்கு தேவையான அளவு அரிசியை நாட்டின் விவசாயிகளிடமிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கொள்வனவு செய்யவுள்ளதாக குறிப்பிட்டார்.

03 இலட்சம் மெற்றிக்தொன் அரிசி கொள்வனவிற்கான அனுமதி வாழ்க்கை செலவு தொடர்பான குழுவில் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் அரிசி தனியார் துறையூடாக நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.