அண்மையில் இலங்கையின் தென் மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது 65 வயதான நபரினால் 30 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலி, நெழுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வௌ்ளத்தில் 30 பேரின் உயிரை, கே.எல்.தயானந்த என்ற 65 வயதுடைய நபர் காப்பாற்றியுள்ளார்.
வீடு மற்றும் சொத்துக்கள் நீரில் மூழ்கியன்று இரவு 12 மணி முதல் அதற்கு அடுத்த நாள் வரையில் சிறிய படகு ஒன்றை பயன்படுத்தி கிட்டத்தட்ட 30 பேரை தயானந்த காப்பாற்றியுள்ளார்.
குறித்த வெள்ளத்தில் தயானந்த உட்பட பலரின் வீடு நீரில் மூழ்கிய தினத்தன்று இரவு பலர் உயிருக்கு போராடியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில், தயானந்த தனது சிறிய படகை பயன்படுத்தி 30 பேரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
தனது உயிரை பற்றி சிந்திக்காமல் தயானந்த செய்த வீர செயலுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.