மனைவியை பகிடி செய்த நபரை நித்திரையிலிருந்து எழுப்பி குத்திக் கொலை செய்த நபர்!!

321

தனது மனை­வியை பகிடி செய்த நபரை தலையில் கூரிய ஆயு­தத்­தினால் குத்திக் கொலை செய்­து­விட்டுத் தப்பிச் சென்ற நபர் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக சிலாபம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பங்­க­தெ­னிய குமா­ர­கட்­டுவ நிவ­ஹல்­புர எனும் பிர­தே­சத்தைச் சேர்ந்த 53 வய­து­டைய நபரே இவ்­வாறு கொலை செய்யப்பட்டவ­ராவார்.

கொலை செய்­யப்­பட்­ட­வரும் அவரைக் கொலை செய்­த­வரும் ஒரே பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாவர். கொலை செய்­யப்­பட்ட நபர் அவரைக் கொலை செய்­த­வரின் மனை­வியை அநா­கரிக­மான முறையில் பகிடி செய்­ததால் அவரை சந்­தேக நபர் எச்­ச­ரித்­தி­ருந்­த­தாக கூறப் ­ப­டு­கி­றது.

அத்­துடன் நிறுத்திக் கொள்­ளாத சந்­தேக நபர், அதி­காலை 1.30 மணி­ய­ளவில் கொலை செய்­யப்­பட்­ட­வரின் வீட்­டுக்குச் சென்று நித்­தி­ரை­யி­லி­ருந்த அவரை எழுப்பி மீண்டும் தனது மனை­வியை பகிடி செய்­த­தற்­காக அவரை எச்­ச­ரித்­துள்­ள­துடன் தனது கையி­லி­ருந்த அரி­வாளால் அவரின் தலையில் வெட்­டி­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். பின்னர் மன்னா கத்தி தாக்­கு­தலில் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளான நபர் சிலாபம் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் அங்கு உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத்­தாக்­கு­த­லை­ய­டுத்து சந்­தேக நபர் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றி­ருந்த நிலையில் இன்று தாக்­கு­த­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட மன்னா கத்­தி­யுடன் அவரைக் கைது செய்ய முடிந்­த­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

சிலாபம் பொலிஸ் நிலைய தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­தகர் வசந்த ஹேரத்தின் ஆலோ­ச­னையின் பேரில் குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் புஷ்பகுமாரவின் தலைமையிலான குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.