இளம் பெண்ணும் பாடசாலை மாணவனும் விஷம் அருந்தியுள்ளனர் : பெண் மரணம்!!

248

காலி பிட்டிகலை பிரதேசத்தில் 21 வயதான இளம் பெண்ணும் 17 வயதான பாடசாலை மாணவனும் விஷம் அருந்திய நிலையில் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் உயிரிழந்துள்ளார். 17 வயதான பாடசாலை மாணவன் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

21 வயதான பெண்ணுக்கும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த பெண்ணுக்கும் 17 வயதான பாடசாலை மாணவனுக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், பெண் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக அறிந்து கொண்ட மாணவன் தானும் விஷம் அருந்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்